தை மாத ராசி பலன்கள் – விருச்சிகம்!!

326

viruchikam

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே, பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே, மனித நேயம் உள்ளவர்களே, நெருக்கடி நேரத்திலும் பதட்டப்படாதவர்களே 3ம் வீட்டில் முடங்கிக் கிடந்த சுக்கிரன் வக்ரமாகி இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணப் பற்றாக்குறை நீங்கும். எதிர்பாராத வகையில் பணம் வரும். கடந்த ஒருமாத காலமாக 2ல் அமர்ந்து குடும்பத்தில் குழப்பங்களையும், பணப் பற்றாக்குறையையும், பார்வைக் கோளாறையும் கொடுத்து வந்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் அமர்வதால் தைரியம் கூடும்.

தடுமாற்றம் நீங்கும். இரண்டு, மூன்று முறை முயன்று முடியாத காரியங்களெல்லாம் முதல் முயற்சியிலேயே முடியும். வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடைய தன-பூர்வ புண்யாதிபதியான குரு 8ல் மறைந்திருப்பதால் திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற பழமையான புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை நல்ல விதத்தில் முடிப்பீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் தொடர்வதால் தன்னம்பிக்கை பெருகும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகாக்கள் மத்தியில் மரியாதை கூடும். மாவட்டப் பொறுப்புகளை கூடுதலாக நீங்கள் பார்க்க வேண்டி வரும். கட்சித் தலைமைக்கும் நெருக்கமாவீர்கள். மாணவர்கள் உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். மந்தம், மறதி விலகும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். கன்னிப் பெண்கள் உயர்கல்வியில் முன்னேறுவீர்கள்.

வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். லாபம் அதிகரிக்கும். தள்ளிப்போன புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள். வேலையாட்களிடம் நிலவிய கோபம் நீங்கும். நல்ல வேலையாட்கள் வருவார்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் வெளிமாநில வேலையாட்களால் நிம்மதி உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் நீங்கும்.

வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்கள் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு திடீர் வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும். விவசாயிகளே ஊடு பயிர், மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர் எதிர்பார்த்து ஏமாந்துபோன வாய்ப்புகள் இப்போது கூடி வரும். வசதி வாய்ப்புகள் தடையில்லாது கூடும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி :19, 20, 21, 22, 28, 29, 30
பெப்ரவரி : 5, 6.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 14, 15 மற்றும் பெப்ரவரி 10, 11, 12ம் திகதி மதியம் 2 மணி வரை அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.